நல்ல தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்: உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

Udhayakumar
நெல்லை: கூடங்குளம் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு சுமூகமான முடிவு சொல்லும்வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் கடற்கரையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்து அணு மின் நிலையத்தின் அருகில் உள்ள கடற்கரையில் முற்றுகை போராட்டத்தை தொடங்கி உள்ளோம். முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு சரியான முடிவு தெரிவிக்கும்வரை போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

கடற்கரையில் காட்டு பகுதியிலேயே தங்கி எங்கள் அறப் போராட்டத்தை தொடர்வோம். எந்த வன்முறைக்கும் நாங்கள் செல்ல மாட்டோம். போலீசார் கைது செய்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.

மேலும் கூடங்குளம் இடிந்தகரை மீனவர்களுக்கு ஆதரவாகவும், அணு மின் நிலையத்தை எதிர்த்தும், கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவாநகரம், புதுக்கிராமம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆரோக்கியபுரத்தில் 300 வள்ளங்கள், 50 கட்டுமரங்கள், சின்னமுட்டத்தில் 350 விசைப்படகுகள், கன்னியாகுமரியில் சுமார் 500 வள்ளங்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்லாது. மீன்பிடி சார்ந்த பிற தொழில்களில் ஈடுபடுவோரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+