கூத்தங்குழியில் உதயகுமார்: கைது நடவடிக்கையை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைத்த கிராமத்தினர்?

Subscribe to Oneindia Tamil

Kuthankuzhi people use dangerous method to protect Udhayakumar
ராதாபுரம்: கூத்தங்குழி கிராமத்தில் இருக்கும் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை போலீசார் கைது செய்வதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு கூடங்குளம் காவல் நிலையத்தி்ல் சரணடைவதாக இருந்த கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோரை 50 இளைஞர்கள் குண்டுகட்டாக தூக்கி படகில் வைத்து கடலுக்குள் சென்றனர். தற்போது உதயகுமார் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் உள்ள ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கூத்தங்குழி கிராமத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவர்கள் ஊருக்குள் புகுந்து உதயகுமாரை கைது செய்வதை தடுக்க அந்த கிராம மக்கள் ஊரைச் சுற்றி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இது தவிர மணலில் வலைகளை புதைத்து வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதனால் போலீசார் கிரமாத்திற்குள் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி ஊருக்குள் புகுந்தால் விபரீதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் உதயகுமாரை கைது செய்வது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.ஜி.க்கள் கண்ணப்பன், ராஜேஷ்தாஸ் ஆகியோர் இடிந்கரையில் உள்ள சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு உதயகுமாரை சரணடையுமாறு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+