மகாராஷ்டிராவில் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் அணியை அனுமதிக்கமாட்டோம்: ராஜ் தாக்கரே மிரட்டல்
மும்பை: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டோம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்தது. மேலும் பாகிஸ்தானில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக மற்ற சர்வதேச கிரிக்கெட் அணிகளும், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை புதுப்பிக்க முயன்றது. இதன் பயனாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்பு கொண்டுள்ளன. வரும் டிசம்பர் மாதம் இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மகாராஷ்டிராவிற்குள் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாட அமைதிக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மகாராஷ்டிராவில் விளையாட அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மும்பையில் நடைபெறும் சர்-சேத்ரா என்ற பாரம்பரிய சங்கீத இசை நிகழ்ச்சியில் பங்கேற்க 8 பாகிஸ்தான் இசை கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் பால்தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு வரும் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி பங்கேற்க உள்ள கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த போட்டியும் நடைபெற திட்டமிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரின் அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications