மகாராஷ்டிராவில் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் அணியை அனுமதிக்கமாட்டோம்: ராஜ் தாக்கரே மிரட்டல்
மும்பை: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டோம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்தது. மேலும் பாகிஸ்தானில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக மற்ற சர்வதேச கிரிக்கெட் அணிகளும், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை புதுப்பிக்க முயன்றது. இதன் பயனாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்பு கொண்டுள்ளன. வரும் டிசம்பர் மாதம் இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மகாராஷ்டிராவிற்குள் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாட அமைதிக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மகாராஷ்டிராவில் விளையாட அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மும்பையில் நடைபெறும் சர்-சேத்ரா என்ற பாரம்பரிய சங்கீத இசை நிகழ்ச்சியில் பங்கேற்க 8 பாகிஸ்தான் இசை கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் பால்தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு வரும் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி பங்கேற்க உள்ள கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த போட்டியும் நடைபெற திட்டமிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரின் அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications