சென்னையில் கியாஸ் சிலிண்டர் கசிவால் தீ: 3 பேர் கருகி பலி- 2 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

Gas Cylinder
சென்னை: சென்னை திருமங்கலத்தில் சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சென்னை திருமங்கலம் அம்பேத்கார் நகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சேகர்.அவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர்களது மகன் சுரேஷ் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஜோதிலட்சுமி நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய முயன்றார் . ஆனால் கியாஸ் சிலிண்டரில் அடைப்பு இருந்ததால் அண்ணா நகர் கியாஸ் ஏஜென்சிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து கியாஸ் ஏஜென்சியின் ஊழியர் துரைராஜ் என்பவர் வந்து அடைப்பை நீக்கிக் கொண்டிருந்தார். இதை ஜோதிலட்சுமியின் அண்ணன் ரவியின் குடும்பத்தினரும் பக்கத்து வீட்டாரும் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அடைப்பு சரி செய்யப்பட்டுவிட்டதாக ஊழியர் துரைராஜ் கூறியுள்ளார். ஆனால் ரெகுலேட்டர் சரியாக பொருத்தப்படவில்லை. இதை கவனிக்காத ஜோதிலட்சுமி தீயை பற்ற வைக்க அதற்குள் கேஸ் கசிந்ததால் குபீர் என வீடு முழுக்க தீ பிடித்தது. இதில் ஜோதிலட்சுமி உப்டட 5 பேரும் தீயில் சிக்கினர்.

அப்போது சிலிண்டரில் ரெகுலேட்டர் சரியாக பொருந்தாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறி வீடு முழுவதும் பரவியது. இதை அறியாத நிலையில் ஜோதிலட்சுமி அடுப்பை ஆன் செய்து தீ பற்ற வைத்துள்ளார். உடனே தீ குபீர் என்று வீடு முழுவதும் பற்றிக்கொண்டது. இதில் 5 பேர் மீது தீ பற்றியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. 5 பேரில் மூவர் உடல் கருகி உயிர் இழந்தனர் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+