டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு.. விலைவாசி கடுமையாக உயரும்!

Subscribe to Oneindia Tamil

Diesel price up
டெல்லி: 15 மாதங்களுக்குப் பின் டீசல் விலையை மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

விலை உயர்வுக்கு முன் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.41.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.46.95-ஆக விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பின் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அளவுக்கு ஒரேயடியாக டீசல் விலை இதுவரை உயர்த்தப்பட்டதும் இல்லை. ரூ. 5 வரை உயர்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.48.91 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ.43.91-க்கு விற்கப்பட்டது.

டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணங்கள், லாரி- வேன் கட்டணங்கள் உயரவுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், உணவு தானியங்கள், பால் உள்ளிட்டவையின் விலைகளும், ஹோட்டல்களில் காபியில் ஆரம்பித்து அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+