டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு கூட்டணிக் கட்சிகள் கண்டனம்
டெல்லி: மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள மற்றும் ஆதரவு தரக்கூடிய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், விலை உயர்வு குறித்து தங்கள் கட்சியிடம் கலந்து பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சியும் விலை உயர்வு நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பினர் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விலை உயர்வு விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல் பரூக்கி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications