நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி கபாடியா ஓய்வு பெறுவதால் அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 1948-ம் ஆண்டு ஜுலை 19-ந்தேதி பிறந்தவர் அல்டமாஸ் கபீர். சட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்த இவர், 1990-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு)யாக பதவியேற்ற அல்டமாஸ் கபீர், அதே ஆண்டு மார்ச் 1-ந்தேதி ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2005-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் அல்டமாஸ் கபீர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக வரும் 29-ந் தேதி அல்டமாஸ் பதவியேற்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+