மகாராஷ்டிர புதிய முதல்வராக நாராயண் ரானே? - டெல்லியில் சோனியாவுடன் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நாராயண் ரானே இன்று சோனியாவை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட இருக்கும் மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தற்போதைய முதல்வர் பிருத்விராஜ் சவாணை அமைச்சராக வைத்துக் கொண்டு முதல்வராக நாராயண் ரானேவை நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தேசியவாத கட்சியின் அமைச்சர்களுக்கு பிருத்விராஜ் சவாண் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பது அக்கட்சியின் புகாராக இருந்து வந்தது. இது அண்மையில் பெரும் புகைச்சலை இரு கட்சிகளிடையே ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் முதல்வரை மாற்ற முடிவு செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications