உதயகுமாரை கைது செய்யக்கோரி காங்கிரஸ் சாலை மறியல்: 15 பேர் கைது
ராஜபாளையம்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை கைது செய்யக்கோரி ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர் தலைமையில் 15 பேர் காங்கிரஸ் கொடியுடன் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவின் சாலையின் குறுக்கே படுத்தும், அமர்ந்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் உதயகுமாரை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்று முன் அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசாரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications