தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்துக்கு பட்டாசுகள்தான் காரணம்: விசாரணை அறிக்கையில் தகவல்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இருந்து சென்னைக்கு ஜூலை 30-ந் தேதி வந்து கொண்டிருந்த ரயிலில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தீப்பிடித்தது. இதில் எஸ்11 என்ற பெட்டி முற்றிலும் தீப்பிடித்து 30 பேர் பலியாகினர். 28 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்மத்திய வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தினேஷ்குமார்சிங் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் முதல் கட்ட அறிக்கையை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. எஸ்-11 பெட்டியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் திடீரென வெடித்ததுதான் தீ பிடித்ததற்கான காரணம் என்றும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சிலரது அஜாக்கிரதையாலேயே இது நடந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications