கல்பாக்கம் அணு மின் நிலையத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
கல்பாக்கம்: கூடங்குளத்தில் போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தை ஆயிரக்கணக்கான மீனவர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் அந்தோணிசாமி பலியானார். இதனைக் கண்டித்து கல்பாக்கத்தில் கடந்த 3 நாள்களாக பல்வேறு தரப்பினரும் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை கல்பாக்கம் அணுமின் நிலைய நுழைவு வாயிலை மீனவ கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அணுமின் நிலையத்துக்கு அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications