எஸ்.ஐ. வீட்டிலேயே வேலையைக் காட்டிய கொள்ளையர்கள்: 5 பவுன் நகை, ரூ.50,000 அபேஸ்
வேலூர்: ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு எஸ்.ஐ. பலராமன் வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் சிறப்பு எஸ்.ஐ. பலராமன். அவர் வேலூர் பெரிய அல்லாபுரம், நாகலிங்கேஸ்வரர் கோயில் தெருவில் வாடகை வீட்டில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பெங்களூர் சென்றிருந்தனர். அவர்களை அழைத்து வர அவர் நேற்று முன்தினம் பெங்களூர் சென்றார்.
பெங்களூரில் இருந்து வீடு திரும்பிய எஸ்.ஐ., குடும்பத்தார் அதி்ர்ச்சி அடைந்தனர். காரணம் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.50,000 ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது.
இது குறித்து எஸ்.ஐ. பலராமன் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
எஸ்.ஐ. வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications