கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு: 2-வது நாளாக கடலுக்குள் இறங்கும் போராட்டம் -சி.பி.எம். ஆதரவு

Subscribe to Oneindia Tamil

கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்குள் இறங்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக அமைதி வழியில் போராட்டம் நடத்திய கூடங்குளம் சுற்றுவட்டார பொதுமக்கள் சில நாட்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால் இந்த போராட்டம் வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடாக மாறியது.

இதைத் தொடர்ந்து 48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் நேற்று முதல் கடலுக்குள் இறங்கும் போராட்டத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

முதல்நாளில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒட்டுமொத்த கிராமங்களும் கலந்து கொண்டன. இன்றைய போராட்டத்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து கடலுக்குள் இறங்கியுள்ளனர். இதேபோல் திருநெல்வேலி வழக்கறிஞர்களும் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்த வந்துள்ளனர்.

ஆனால் நேற்றுபோல் இன்று கடற்படையின் கண்காணிப்பு விமானம் வானில் பறக்கவில்லை. வழக்கமாக நிறுத்தப்படும் கடலோரக் காவல்படையின் கப்பல் மட்டும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+