மாறுவேடத்தில் உதயகுமார் உள்பட 4 பேரைத் தேடி அலையும் போலீசார்

Subscribe to Oneindia Tamil

கூடங்குளம்: கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார், புஷ்பராயன், முகிலன், ஜேசுராஜ் ஆகியோரை கைது செய்ய போலீசார் மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று 2வது நாளாக கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளத்தில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர். அதன் பிறகு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார்.

இந்நிலையில் மறுநாள் இடிந்தகரை வந்த அவர் அன்று இரவு கூடங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடையப் போவதாக அறிவித்தார். ஆனால் அவரை சரணடையவிடாமல் அவரது ஆதரவாளர்கள் அவரை படகில் ஏற்றிச் சென்று ஊத்தங்குழியில் ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் அவர் சரணடைவதை விரும்பாததால் அவர் சரணடைய மாட்டார் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையே வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உதயகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயகுமார், புஷ்பராயன், முகிலன், ஜேசுராஜ் ஆகியோரை கைது செய்வதில் போலீசார் முனைப்பாக உள்ளனர். இதையடுத்து அவர்கள் மாறுவேடத்தில் கூடங்குளத்திற்கு அருகில் உள்ள கடற்கரை கிரமாங்களில் அவர்களைத் தேடி வருகின்றனர்.

கூத்தங்குழிக்குள் போலீசார் நுழையாமல் இருக்க ஊரைச்சுற்றி அக்கிராம மக்கள் நாட்டு வெடிகுண்டுகளை புதைத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+