ஆஸி. செல்லும் வழியில் நடுக்கடலில் 21 நாட்களாக தத்தளிப்பு- 67 பேரை காப்பாற்றிய நாகை மீனவர்
நாகப்பட்டினம்: இலங்கையின் பருத்தித்துறையில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட அகதிகளின் படகில் 21 நாட்களாக தத்தளித்த 67 ஈழத் தமிழர்களை நாகப்பட்டினம் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில் இருந்து 67 பேருடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட படகின் இயந்திரம் பழுதடைந்ததால், 21 நாட்களாக நடுக்கடலில் உணவு தண்ணீரின்றி 63 ஈழத் தமிழர்கள் தத்தளித்திருக்கின்றனர்.
இந்தப் படகில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 சிங்களவர்களும், 3 பெண்கள் உள்ளிட்ட 63 தமிழர்களும் இருந்தனர்.
பேபி என்பவரின் தலைமையில் இவர்கள் கடந்தமாதம் 24-ந் தேதி பருத்தித்துறையில் இருந்து படகு ஒன்றில் புறப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து படகு திடீரென பழுதடைந்தது. இதையடுத்து அவர்கள் நடுக்கடலில் உணவோ, குடிநீரோ இல்லாமல் தவித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்ற ஈச்சாங்குப்பத்தைச் சேர்ந்த தம்பிராஜ் என்பவர் கடலில் தத்ளித்த 67 பேரையும் மீட்டு நாகபட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தார்.












Click it and Unblock the Notifications