தண்ணீரில் நின்று தத்தளிக்கும் மக்களை முழுமையாக மூழ்கடித்து விடும்-விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக டீசல் விலையை ஏற்றியதோடு நில்லாமல், வருடம் ஒன்றிற்கு ஒரு குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்தான் என்கின்ற புதிய கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருக்கிறது. எதன் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
எந்த ஒரு குடும்பமும் இந்த 6 சிலிண்டர்களுக்குள் வருடம் முழுவதும் தங்கள் சமையல் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் வாழ வழி தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இந்த டீசல் விலை உயர்வோடு, வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 6 சிலிண்டர் என்ற கட்டுப்பாடு என்பது, ஏற்கனவே கழுத்தளவு தண்ணீரில் நின்று தத்தளிக்கும் மக்களை முழுமையாக மூழ்கடித்து விடும்.
எனவே காலம் தாழ்த்தாது உடனடியாக இந்த டீசல் விலை உயர்வையும், சிலிண்டர் கட்டுப்பாட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications