அன்னிய முதலீடு, டீசல் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு மமதா 72 மணி நேர கெடு

பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது.
மத்திய அரசின் இம்முடிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கெடு விதித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறியுள்ளதாவது:
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. அக்கூட்டத்தில் பல்பொருள் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சில்லரை வணிகம், ஆயுள் காப்பீடு, விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இந்த முடிவுகளை 72 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 18-ந் தேதியன்று நடைபெறும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்












Click it and Unblock the Notifications