மாவோயிஸ்டுகளுக்கு வெடிமருந்து கடத்தியதாக ஆந்திர கட்டுமான நிறுவனத்தினர் 7 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மல்காங்கிரி: மாவோயிஸ்டுகளுக்கு வெடிபொருட்கள் கடத்திய ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் சிஇஓ உட்பட 7 பேரை ஒடிஷா போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிஷா எல்லையில் உள்ள மல்காங்கிரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது ஹைதராபாத்தை சேர்ந்த Lekcon Infra Private Limited என்ற கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தினர் மாவோயிஸ்டுகளுக்கு வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை கடத்திச் செல்வதாக ஒடிஷா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் சிஇஒ மற்றும் ஊழியர்களை ஒடிஷா போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 50 கிலோ வெடிமருந்து, மாவோயிஸ்டுகளின் புத்தகங்க, 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவோயிஸ்டுகள் பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காக இப்படி வெடிமருந்துகள் கடத்தி மாவோயிஸ்டுகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+