கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா பண உதவி செய்கிறது: ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: அமெரிக்கா கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பண உதவி செய்து போராட்டத்தை தூண்டிவிடுவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பத்திரிக்கையான ஆர்கனைசரில் கூறியிருப்பதாவது,
ஜெய்தாபூரில் பிரான்ஸ் கூட்டணியிலும், கூடங்குளத்தில் ரஷ்யா கூட்டணியிலும் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையங்களை மூட அமெரிக்கா ஒரு பிரிவினரைத் தூண்டி போராட வைத்துள்ளது. அரசியலில் குதிக்கும் எண்ணத்துடன் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கோடிக்கணக்கான பணத்தை உள்ளூர் பிஷப்களால் நடத்தப்படும் என்.ஜி.ஓ.க்களுக்கு அளித்து கூடங்குளத்தில் போராட்டத்தை தூண்டி விடுகிறது. அமெரிக்காவுடன் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம் செய்துள்ளபோதிலும் அதனுடன் சேர்ந்து இன்னும் அணு மின் நிலையம் அமைக்கவில்லை. இந்நிலையில் ஜெய்தாபூர் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையங்களை மூடிவிட்டால் அதற்கு மாற்று வழியை தான் காண்பிக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications