மமதாவுடன் பேசுகிறார் மன்மோகன்சிங்... சிலிண்டர் கட்டுப்பாட்டை கைவிடுகிறது மத்திய அரசு?

மத்திய அரசு விலை உயர்வு நடவடிக்கையை திரும்பப் பெறாவிட்டால் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்று திட்டமிட்டிருந்தது திரிணாமுல் காங்கிரஸ். இதனிடையே கடந்த 12 மணி நேரமாம மமதாவை சமாதனப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தையையும் காங்கிரஸ் நடத்தி வந்திருக்கிறது. இதன் முடிவாக இன்று பிற்பகல் அல்லது இரவு மமதாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் பேசக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும் மமதா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட டீசல் விலையில் சற்று குறைக்கவோ அல்லது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான கட்டுப்பாட்டை முற்றாக கைவிடவும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி விவகாரத்தில் மத்திய அரசு மமதாவிடம் பணிந்து போகாது என்றுதான் கூறப்படுகிறது. ஏனெனில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி நழுவிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
பார்ப்பம்... மமதாவின் மவுசு எப்படி என்று?












Click it and Unblock the Notifications