படிக்க முடியலை, கொசு கடிக்குது, தண்ணீர் பாய்ச்ச முடியலை...12 நேர பவர் கட்டால் திண்டாடும் மக்கள்!

தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் மின்தடை நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. காற்றாலைகள் மூலம் குறைந்த அளவே மின்சாரம் கிடைக்கிறது. இதனால் தென்மாவட்டங்களில் கடந்த இரணடு நாட்களாக 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்தடை நீடிக்கிறது. இதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும், இரவு 11 மணி முதல் 12 மணி வரையும், அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரையும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது. 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது.
பருவமழை பெய்துள்ள நிலையில் கிணறுகளில் இருக்கும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு மின்தடை பாதிப்பை ஈடுகட்ட டீசல் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இந்நிலையில் டீசல் விலையும் உயர்த்தப்பட்டுவிட்டதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் எண்ணெய், பருப்பு மில்கள், பிரிண்ட்டிங், தறிகள் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. முதியோர்கள் புழுக்கம், கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு தூக்கம் இழந்து உடல் நலக்குறைபாடுகளை சந்தித்து வருகின்றனர். மேலும் காலாண்டு தேர்வு நேரம் என்பதால் பாடம் படிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications