உதயக்குமாருக்கு என்கவுகண்டரா??.. கூடங்குளத்தைச் சுற்றி வரும் திகில் பீதி!

கூடங்குளம் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இடையில் தொய்வடைவது போல தெரிந்த இப்போராட்டம் தற்போது முன்பை விட வேகமாக நடந்து வருவதால் ஆட்சியாளர்களும், காவல்துறையிரும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் என்பதே உண்மை.
கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நடந்த முற்றுகைப் போராட்டத்தை கலைத்து முறியடித்து விட்டாலும் கூட தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் பதட்டம் நிலவிக் கிடப்பதைக் கண்கூடாக காண முடிகிறது.
இந்த நிலையில் போராட்டக் குழுத் தலைவர்களான உதயக்குமார், புஷ்பராயன், மைபா சேசுராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடித்தால், அத்தனைப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டி விடலாம் என்று போலீஸார் முனைப்புடன் தேடி வருகின்றனர். ஆனால் அவர்களை கிராம மக்கள் படு பத்திரமாக ஒளித்துள்ளனர். இந்த அரணைத் தாண்டி போலீஸாரால் போக முடியாத நிலை காணப்படுகிறது.
போலீஸாரிடம் சரணடையப் போவதாக உதயக்குமார் கூறினாலும் அதை கிராம மக்கள், போராட்டக் குழுவினர் ஏற்கவில்லை. சரணடைவதற்காக வந்த அவரை அப்படியே குண்டுக்கட்டாக தூக்கி படகில் போட்டு கடலுக்குள் கொண்டு போய் தற்போது மறைவிடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர் கிராமத்தினர்.
இந்த நிலையில்தான் உதயக்குமாரை சுட்டுப் பிடிக்கவும் போலீஸார் தயாராக இருப்பதாகவும், என்கவுண்டர் நடத்தப்படலாம் என்றும் தகவல் பரவியுள்ளது. இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. காரணம், தேவைப்பட்டால் உதயக்குமாரை சுட்டுப் பிடிக்க அனுமதி தருமாறு மேலிடத்திற்கு காவல்துறை சார்பில் கோரிக்கை போயுள்ளதாம். அனுமதி கிடைத்தால் பெரும் போலீஸ் படையுடன் திமுதிமுவென புகுந்து கிராமத்தினரை கலைத்து விரட்டி விட்டு, துப்பாக்கி முனையில் உதயக்குமாரை கைது செய்யும் திட்டத்தில் போலீஸார் உள்ளனராம். இதற்காக சிறப்புப் படையே கூட தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், இப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று காவல் துறை வட்டாரத்தில் மறுத்துக் கூறுகிறார்கள். ஆனால் இந்தத் தகவல் பரவியதால் தற்போது கூடங்குளம், கூத்தங்குழி, இடிந்தகரை மக்கள் மேலும் டென்ஷனாகியுள்ளார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications