மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்: டெல்லியில் முலாயம், பரதன், காரத். சந்திரபாபு நாயுடு கைது

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் இடதுசாரிகள் தலைமையில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளும் தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடத்தின.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இடதுசாரித் தலைவர்களுடன் காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாதியின் கட்சித் தலைவரான முலாயம்சிங் யாதவும் கலந்து கொண்டார்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கையோடு, நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றதால் இடதுசாரித் தலைவர்கள் ஏபி பரதன், சீத்தாரம் யெச்சூரி, பிரகாஷ் காரத், முலாயம்சிங் யாதவ், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினரும் ஜந்தர் மந்தர் பகுதியில் தனியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications