தூத்துக்குடி துறைமுகம, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம்: சுப. உதயகுமார்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 22-ந் தேதியன்று தூத்துக்குடி துறைமுகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் வரும் 25-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த ஓராண்டாக அமைதிவழியில் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. அண்மையில் கூடங்குளம் கடற்கரையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இதையடுத்து கடலுக்குள் போராட்டம், மணலுக்குள் போராட்டம் என அடுத்தடுத்து நடந்த இந்தப் போராட்டங்களின் மற்றொரு பகுதியாக முற்றுகைப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications