மதுரையில் வரலாறு காணாத பந்த் -100 சதவீத வெற்றி!

Subscribe to Oneindia Tamil

Madurai
மதுரை: மதுரையில் இதுவரை இல்லாத அளவுக்கு பாரத் பந்த்துக்கு முழு ஆதரவு கிடைத்தது. அரசுப் பேருந்துகள் ஓடின. மற்றபடி அத்தனை கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் கிட்டத்தட்ட ஓடவில்லை.

பாரத் பந்த்துக்கு மதுரையில் இன்று பெருத்த ஆதரவு காணப்பட்டது. 100 சதவீத அளவுக்கு வெற்றி என்று சொல்லும் அளவில் அங்கு இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மதுரையின் முக்கிய அங்கங்களில் ஒன்று டீக்கடைகள். ஆனால் இன்று மதுரையில் ஒரு டீக்கடையைக் கூட காண முடியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட அத்தனை கடைகளும் மூடப்பட்டிருந்தன.

சாதாரண தள்ளுவண்டிக் கடைகளையும் கூட காண முடியவில்லை. காலையிலேயே மதுரை மக்களை தட்டி எழுப்பும் சாலையோர இட்லிக் கடைகள், இடியாப்பக் கடைகளையும் கூட காண முடியவில்லை.

காய்கறிக் கடைகள் இல்லை, மருந்துக் கடைகளும் மூ்டப்பட்டிருந்தன. எந்தத் தொழில்நிறுவனமும் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டுமே ஓடின. மினி பஸ்கள் குறைந்த அளவிலேயே ஓடின.

மதுரை நகரமே கிட்டத்தட்ட வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்த பந்த் குறித்து வர்த்தக அமைப்பினர் கூறுகையில், மதுரை வரலாற்றில் பந்த் ஒன்றுக்கு 100 சதவீத ஆதரவு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. அந்த அளவுக்கு அனைத்து வர்த்தகர்களும் கடைகளை, நிறுவனங்களை மூடி மத்திய அரசுக்குத் தங்களது எதிர்ப்புகளைக் காட்டியுள்ளனர் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+