Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி வேன் ஏறி ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாப மரணம்

Subscribe to Oneindia Tamil

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பின்னால் நின்று கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் மீது பள்ளிக்கூட வேன் ஏறியதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

தமிழகத்தில் பள்ளிக்கூட வேன், பஸ்கள் மோதி சிறார்கள் பலியாகி வருவது தொடர்கதையாகி விட்டது. தினந்தோறும் இப்படி ஒரு சம்பவம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பழனியில் இன்று காலை ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. பழனி நேதாஜி நகரில் இன்று காலை தனது அண்ணனை பள்ளிக்கு வழியனுப்ப ஒன்றரை வயது சிறுவன் ஹரிகிருஷ்ணன், தனது தாயாருடன் சென்றான். அப்போது தனது மூத்த மகனை வேனில் ஏற்றி விடுவதற்காக ஹரிகிருஷ்ணனை இடுப்பிலிருந்து கீழே இறக்கி நிறுத்தி வைத்தார் தாயார்.

அப்போது சிறுவன் பள்ளிக்கூட வேனுக்குப் பின்னால் போயுள்ளான். அங்கு போய் நின்று வேடிக்கை பார்த்துள்ளான். இதை அறியாத வேன் டிரைவர் ஜாபர் வேனை பின்னால் ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது சிறுவன் ஹரிகிருஷ்ணன், வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து டிரைவர் ஜாபரைக் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+