'அதில்' மும்முரமாக இருந்த இளைஞர்... டிரஸ், பணத்தை ஆட்டையைப் போட்டு ஓடிய கும்பல்!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி புலம்பியுள்ளார். அதாவது ஒரு பெண்ணுடன் கடற்கரையில் இவர் உறவில் மும்முரமாக இருந்தபோது எங்கிருந்தோ வந்த கும்பல் இவரது டிரஸ் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாம். ஜட்டி மட்டுமே தப்பியுள்ளது. அந்தப் பெண் உள்பட அனைவருமே செமத்தியாக டிராமா போட்டு திட்டமிட்டு இதைச் செய்து விட்டதாக அவர் புலம்பியுள்ளார்.
அந்த 'நண்பர்' கூறுவதை அவரது வாயாலேயே கேளுங்களேன்...!
நான் ஒரு பெணணுடன் கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொண்டேன். ஆனால் எல்லாமே தப்பாப் போச்சு... பெரிய டிராமாபோட்டு என்னை ஜட்டியுடன் நிற்க வைத்து வி்ட்டார்கள்.
எனக்கு 20 வயதாகிறது. சில நண்பர்களுடன் நான் ஒரு கிளப்புக்குப் போனேன். பார்ட்டி, கடற்கரை உலா என்பதால் நிறைய எதிர்பார்ப்புகளுடன் போனேன்.
நாங்கள் மொத்தம் ஐந்து பேர் போயிருந்தோம். அப்போது கிளப் நடன அரங்கில் ஒரு கவர்ச்சிகரமான பெண்ணைப் பார்த்தேன். உடனே அவள் அருகில் சென்று பேச்சு கொடுத்தேன். அவளும் நன்றாகவே பேசினாள். சற்று சீண்டும்படியும் பேசினாள். இதனால் சீக்கிரம் ஒர்க்அவுட் ஆகி விடும் என்ற நம்பிக்கை வந்தது.
பிறகு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவர்கள் மெதுவாக கலைய ஆரம்பித்தனர். அந்தப் பெண் என்னிடம், நான் தங்கியிருக்கும் ரூம் வரை துணைக்கு வர முடியுமா என்று கேட்டாள். கடற்கரை வழியாகப் போகலாம் என்றும் கூறினாள்.
நானும் உடனே சரி என்றேன். இரவு நேரம், கடற்கரை ஓரம், என்னால் தாங்க முடியவில்லை. அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தேன். பதிலுக்கு அவளும் கொடுத்தாள். பிறகு இருவரும் அப்படியே கடற்கரை மணலில் அமர்ந்தோம். பிறகு செக்ஸ் நடவடிக்கையில் இறங்கினோம். நான் எனது டிரஸ்ஸை முழுமையாக கழற்றி ஓரமாக வைத்து விட்டு வேலையில் இறங்கினேன்.
அபாரமான அனுபவம் அது. அப்போதுதான் அது நடந்தது. திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்தது ஒரு கும்பல். நான் செக்ஸில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் திடீரென வந்ததால் குழம்பிப் போனேன். வந்த வேகத்தில் எனது டிரஸ், பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸ் உள்ளிட்டவற்றை தூக்கிக் கொண்டு அந்தக் கும்பல் ஓடியது. நான் அந்தக் கும்பலிடமிருந்து எனது டிரஸ்ஸைப் பறிக்க முயன்றேன். ஆனால் முடியவி்ல்லை, வெறும் ஜட்டி மட்டுமே கிடைத்தது. திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண்ணையும் காணவில்லை.
இதனால் பெருத்த அவமானம் மற்றும் அதிர்ச்சியுடன், ஜட்டி மட்டுமே அணிந்தபடி எனது அறைக்குத் திரும்பினேன்.
இப்போதெல்லாம் எனக்குப் பெண்களின் மீ்து நம்பிக்கையே போய் விட்டது. சாதாரணமாகக் கூட என்னால் பெண்களிடம் இப்போது பேச முடியவில்லை. எந்தப் பெண்ணாவது என்னிடம் நைசாக பேசினால், திட்டமிட்டு என்னைக் கவிழ்க்கப் பார்க்கிறாரோ என்று சந்தேகம்தான் வருகிறது என்று புலம்பியுள்ளார் இந்த இளைஞர்.
இந்த இளைஞர் தனது பெயர், விவரத்தை வெளியிடவில்லை..!












Click it and Unblock the Notifications