தெலுங்கானாவுக்கு 'க்ரீன் சிக்னல்?': சந்திரசேகர் ராவுடன் சோனியா இன்று முக்கிய ஆலோசனை

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு.
இதனால் இதுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இதனால் மத்திய அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது.
மேலும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டின் ஆதரவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தெலுங்கான பகுதிகளில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆதரவுத் தளத்தைக் கூட ஜெகன் மோகன் உடைத்தெறிந்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிடக் கூடும் எனக் கூறபடுகிறது.
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் இன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நிதியமைச்சர் சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று ஆளுநர் நரசிம்மன் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவை சோனியா காந்தி சந்தித்துப் பேச இருக்கிறார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஒப்புக் கொண்டால் தமது கட்சியையை காங்கிரஸுடன் இணைத்துவிடுவேன் என்று ஏற்கெனவே சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார்.
தற்போதைய நிலையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை தேவைப்படுவதால் எந்த ஒரு நிலைப்பாட்டையும் காங்கிரஸ் மேற்கொள்ளக் கூடும் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி க்ரீன் சிக்னல் கொடுத்துவிடும் என்றே கூறப்படுகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications