நெல்லையில் லேசான நிலஅதிர்வு: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் விரிசல்
நெல்லை: நெல்லையை அடுத்த புளியங்குடியை அடுத்த தலைவன்கோட்டையில் இன்று அதிகாலையில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் விரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடகரை, அச்சன்புதூர், வாவா நகரம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 16ம் தேதி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 25 வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.
இதில் தலைவன்கோட்டையை அடுத்த நவநீதகிருஷ்ண நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கருத்தபாண்டியனின்(60) வீ்ட்டில் விரிசல் ஏற்பட்டது. இன்று அதிகாலை 1 மணியளவில் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கருத்தபாண்டியன், வீட்டில் உள்ள பொருட்கள் விழுந்த சத்தம் கேட்டு எழுந்தார்.
அப்போது நிலஅதிர்வு ஏற்படுவதை உணர்ந்த அவர், உடனடியாக குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். நிலஅதிர்வில் கருத்தபாண்டியனின் வீட்டு தரை, சுவர் மற்றும் கழிப்பறை ஆகிய இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. மற்றபடி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
நிலஅதிர்வு அதிகாலையில் ஏற்பட்டதால், தூக்கி கொண்டிருந்த பலருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications