ஜார்க்கண்ட்: தியோகர் ஆசிரமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி- 20 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
தியோகர்: ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் தாக்கூர் அனுகுல் சந்த்ரா ஆசிரமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகினர். இவர்களில் 8 பேர் பெண்கள். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தியோகரில் தாக்கூர் அனுகுல் சந்த்ராவின் 125-வது பிறந்தநாள் சிறப்பு வழிபாட்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு வழிபாட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் பெண்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. ஆனால் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று தியோகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications