ஜனாதிபதியாக இருந்தபோது பிரதீபா பாட்டீலுக்கு கிடைத்த கிஃப்டுகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதி பவனை விட்டு வெளியேறுகையில் கிட்டத்தட்ட 40 லாரிகளில் தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏற்றிச் சென்றார். அந்த பொருட்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அமராவிதியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அருங்காட்சியகத்தை அவரது மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திர சிங் ஷெகாவத் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது பெறப்பட்ட பரிசுப் பொருட்கள் குறித்து விவரம் கேட்டிருந்தார்.
அவருக்கு அனுப்பப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது,
பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் அவருடைய மகனுக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அகர்வால் கூறுகையில், பிரதீபா பாட்டீலுக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அவர் ஒப்படைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரானவுடன் பிரணாப் முகர்ஜி முடிவு செய்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் செயலகம் அந்த பரிசுப் பொருட்களை ஒப்படைக்குமாறு பிரதீபா பாட்டீலை கேட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பிரதீபா தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் ரூ.205 கோடி செலவில் 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்த யாரும் இவ்வளவு செலவில் இத்தனை நாடுகளுக்கு சென்றதில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications