'மகா.' நெருக்கடி, அமைச்சரவை மாற்றம்.. கூடுகிறது ஐமுகூ ஒருங்கிணைப்புக் கூட்டம்
டெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அஜீத் பவார் குரூப்பால் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பரபரப்பான பின்னணியில் இன்று சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
கூட்டணியை விட்டு திரினமூல் காங்கிரஸ் விலகிப் போன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிசயால் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினையின் பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பெரும் ஊழல் புகார்கள், நிதி மோசடிப் புகார்களில் சிக்கியதால், துணை முதல்வராக இருக்கும் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜீத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். மேலும் அவருக்கு ஆதரவாக பவார் கட்சி அமைச்சர்களும் விலகுவதாக தெரிவித்துள்ளனர். சுயேச்சைகள் 13 பேரும் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர். எனவே காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இருப்பினும் அஜீத் பவார் விவகாரம் இன்றைய கூட்டத்தில் எழுப்பப்படாது என்று மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேல் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை தவிர அமைச்சரவை மாற்றம் வேறு விரைவில் வரவுள்ளது. அதுகுறித்தும் கூட்டத்தில் பேசப்படலாம் என்று தெரிகிறது. மேலும், பிரதமரின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் போர்க்குரலுக்குப் பதிலடியாக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு சேர பதில் குரல் எழுப்புவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோஷ்டிப் பூசலை விட்ருங்க.. ராகுல் காந்தி கோரிக்கை
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு கட்சியினர் மத்தியில் பேசும்போது கோஷ்டிப் பூசலை சுட்டிக் காட்டி அறிவுரைகளைக் கூறிப் பேசினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநில காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் இல்லாதிருந்தால் குறைந்தபட்சம் 25 முதல் 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தொண்டர்கள் தீவிரம் காட்ட வேண்டும். அப்போதுதான் இப்போது ஆட்சியில் உள்ள அரசை அகற்றுவதற்கு மக்கள் மனதளவில் தயாராவார்கள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கட்சியினர் எடுக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் துணிச்சலோடு செயல்பட வேண்டும் என்றார் அவர்
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications