பாக்யராஜ் தகனத்திற்கு முன் பூர்ணிமா கேட்ட ஒரு கேள்வி.. "என்னால தாங்கிக்க முடியல" பார்த்திபன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் மறைந்து சில நாட்கள் ஆகியும், அவரை பற்றிய நினைவுகளும், இறுதி நேரத்தில் நடந்த சம்பவங்களும் இன்னும் ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை. அவருடைய குடும்பத்தினர் மட்டுமல்ல, அவருடன் வாழ்ந்தவர்களும், பணியாற்றியவர்களும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நினைவை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், இயக்குநர் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பார்த்திபன் பேட்டி

பாக்யராஜின் மறைவு செய்தி தெரிந்த நிமிடத்திலிருந்தே இறுதி சடங்கு முடியும் வரை குடும்ப உறுப்பினர் போல ஓடி ஓடி அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தவர் பார்த்திபன். தனது குருநாதருக்கு கடைசி மரியாதையாக "அன்புடன் உங்கள் பாக்யராஜ்" என்று எழுதப்பட்ட பேட், வெள்ளை காகிதங்கள், பேனா ஆகியவற்றை அவரது நெஞ்சின் மீது வைத்து வழியனுப்பியதும் பலரின் கண்களை கலங்க வைத்தது.

K Bhagyaraj Poornima Bhagyaraj Parthiban

பூர்ணிமா கேட்ட கேள்வி

இப்போது அவர் கூறிய இன்னொரு சம்பவம் பலரையும் உருக வைத்துள்ளது. பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பூர்ணிமா அமைதியாக பார்த்திபன் அருகே வந்து, "சார் போட்டிருக்கும் கண்ணாடியை கழற்றி வைத்துவிடலாமா... தீயில் அது வெடித்து முகத்தில் குத்திவிடுமோ..." என்று கேட்டாராம். அந்த ஒரு கேள்வியை கேட்டபோது பூர்ணிமாவின் மனநிலையை பார்த்திபனால் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம்.

அதை நினைவு கூர்ந்த அவர், "என்னால் பதில் சொல்லவே முடியவில்லை. கண்ணீரை அடக்கிக்கொண்டு 'வேண்டாம் மேடம்... அப்படியே இருக்கட்டும்' என்று மட்டும் சொன்னேன். இறந்தவர்களுக்கு எதுவும் தெரியாது என்று எல்லாரும் சொல்வார்கள். ஆனால் நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு, அவர்களுக்கு வலிக்கக் கூடாது என்று நம்மையே நம்ப வைக்கிறது. அந்த அன்புதான் அப்போது பூர்ணிமா மேடம் கேட்ட அந்த ஒரு கேள்வியில் தெரிந்தது" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இந்த வார்த்தைகள் தற்போது இணையத்தில் ஆயிரக்கணக்கானோரின் மனதை நெகிழ வைத்துள்ளன.

K Bhagyaraj Poornima Bhagyaraj Parthiban

பாக்யராஜ் பேட்டி

ஏனென்றால், பூர்ணிமாவுக்கும் பாக்யராஜுக்கும் இருந்த பாசம் பற்றி அவர் வாழ்ந்த காலத்திலேயே பலமுறை பேசியிருக்கிறார். ஒரு பேட்டியில், தனது கையில் எப்போதும் அணிந்திருக்கும் 'R' எழுத்து பொறித்த மோதிரம் குறித்து பாக்யராஜ் சொல்லியிருந்த சம்பவமும் இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

அதில் அவர், "என்னுடைய முதல் மனைவி பிரவீனா, நான் படங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் 'R' எழுத்து பொறித்த மோதிரத்தை வாங்கி கொடுத்திருந்தார். அதை நான் எப்போதும் அணிந்திருப்பேன். ஆனால் ஒரு படப்பிடிப்பின்போது அந்த மோதிரம் ஆற்றில் தவறி விழுந்து போய்விட்டது. அந்த விஷயத்தை பூர்ணிமாவிடம் சொன்னேன். அடுத்த சில நாட்களில் அதே மாதிரி 'R' எழுத்து போட்ட புதிய மோதிரத்தை வாங்கி எனக்கு பரிசாக கொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை அதைதான் அணிந்திருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

K Bhagyaraj Poornima Bhagyaraj Parthiban

அதுமட்டுமல்ல, பல பேட்டிகளில் "என் வாழ்க்கையில் பூர்ணிமா வந்த பிறகு நான் இன்னும் அமைதியான மனிதனாக மாறினேன். என் குடும்பத்தை தாங்கி நிற்பவர் அவர்தான்" என்று பெருமையாகவும் பேசியிருக்கிறார். அதேபோல் பூர்ணிமாவும், "பாக்யராஜ் எனக்கு கணவர் மட்டும் இல்லை... நல்ல நண்பர், நல்ல ஆசிரியர்" என்று பல நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கிறார்.

குறையாத காதல்

அதனால்தான், நேற்று வரை சிரித்துப் பேசி, நண்பர்களுடன் நேரம் கழித்த கணவர், மறுநாள் காலை திடீரென தன்னை விட்டு பிரிந்துவிட்டார் என்ற உண்மையை பூர்ணிமாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறுதி அஞ்சலியின் போது அவர் மீண்டும் மீண்டும் கதறி அழுத காட்சிகள் பலரையும் கலங்க வைத்தன.

அவரை ஆறுதல் சொல்ல ராதிகா, நயன்தாரா, குஷ்பு, சுஹாசினி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வந்திருந்தாலும், கணவரை இழந்த மனைவியின் வேதனையை யாராலும் குறைக்க முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+