மே.வங்கத்தில் ஒரு தொகுதி கூட காங்கிரஸுக்கு கிடைக்காது: மமதா சவால்!

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதிகாரத்தை தவறுவதாகப் பயன்படுத்துவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கணக்குகளை சிபிஐ மூலம் சோதனையிட்டுப் பார்த்தனர். ஆனால் ஒன்றும் சிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கூட்டணி கட்சியினரை ஒருபோதும் மதிப்பது கிடையாது. ஆலோசிப்பதும் கிடையாது. காங்கிரஸ் கட்சி தவறான கொள்கை முடிவை எடுத்ததால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம். எதையுமே வெளியில் சொல்லாமல் அமைதியாக செய்துவிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நினைப்பு ஒருபோதும் பலிக்காது. அவர்கள் நடத்துவது நிலையான அரசு கிடையாது. நாடாளுமன்ற மக்களவைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மக்களை கவரும் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு தேர்தலை சந்திப்பார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சி செய்யப் போகிறது.
காங். அல்லாத முதல்வர்கள் கூட்டமைப்பு
இதேபோல் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை சாராத முதல்வர்களைக் கொண்ட ஒரு முன்னணி அமைப்பை உருவாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். காங்கிரஸ் கட்சியானது பணம், அதிகார பலங்களின் மூலம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என கனவு காண்கிறது. ஒருகாலத்திலும் அது நடக்கவே நடக்காது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications