'சீட்டு' வாங்கித்தர 'நோட்டு' வாங்கிய சாத்துரார் பலே பட்டை நாமம்! கோர்ட்டில் திமுக தொண்டர்!
சென்னை: இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது.. இதுவெறும் திரைப்பட வசனமல்ல என்பது திமுக தலைவர் பராசக்தி படத்திற்காக எழுதிய வசனம். இதனை நிரூபிக்கும் வகையில் நிஜமாகவே திமுக தொண்டர் ஒருவர் விசித்திர வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்த கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விவரம்:
1984 முதல் நான் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட விரும்பினேன். இதற்காக கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் ரூ.32 லட்சம் கொடுத்தேன். ஆனால் எனக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்பப் பெறக் கோரினேன். ஆனால் சாத்தூரார் தர மறுப்பதுடன் மிரட்டல் விடுக்கிறார்.
எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சாத்தூர் ராமச்சந்திரனைக் கண்டித்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் எதிரில் வரும் 5-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை போலீசில் விண்ணப்பித்தேன். ஆனால் போலீசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்க சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறபட்டது.
இந்த மனு நேற்று என்.பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இம் மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications