சென்னையை உலுக்கிய திடீர் மழை- மூவர் பலி! மரங்கள் வேரோடு பெயர்ந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு!!
சென்னை: சென்னை நகரை திடீரென நேற்று உலுக்கிய பெரும் சூறாவளி மற்றும் மழைக்கு 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடுமையான சூறாவளிக் காற்றினால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு விழுந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை கொட்டித் தீர்த்ததால் விமானப் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
மின்னல் பலி கொண்ட சிறுவன்
சென்னை நகரில் நேற்று திடீரென கருமேகம் சூழ்ந்து பெரும் சூறாவளி காற்று வீசியதுடன் கன மழையும் சேர்ந்து கொண்டது. இடியும் மின்னலும் சேர்ந்து சென்னை நகரவாசிகளை அச்சப்பட வைத்தன. இந்த மின்னல் தாக்கியதில் சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த சிறுவன் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த அவன் மீரான் என்பவரின் சுண்டல் கடையில் 2 நாளுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்திருந்தான். சிறுவன் விக்னேஷுக்கு அருகில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் மின்னல் தாக்கி படுகாயமடைந்தான். அவனைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை
மண்சரிவில் சிக்கியவர் பலி
சென்னையை நடுங்க வைத்த சூறாவளி புயலின் போது வியாசர்பாடி-எருக்கஞ்சேரி இடையே உள்ள கழிவுநீரகற்றும் பழைய குழாயை எடுத்துவிட்டு மாற்றுக்குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்காக குழிதோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெரும் சூறாவளியால் அந்தக் குழியில் மண் சரிவு ஏற்பட்டு குழிக்குள் இருந்த பாபு என்பவரை மூடியது. அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
சலவை தொழிலாளி பலி
சென்னை அயனாவரத்தை சேர்ந்த கடம்பாடி என்ற சலவை தொழிலாளி கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சென்னை நகரில் நேற்றைய திடீர் சூறாவளி, மழைக்கு மொத்தம் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் சூறாவளி காற்றுடன் நேற்று பலத்த மழை பெய்ததால் 100க்கும் அதிகமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னையை பீதிக்குள்ளாக்கிய சூறாவளிக்கு மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள், மெட்ரோ ரயில் தடுப்புகள், விளம்பர போடுகள், வீடுகளின் தகர கூரைகள் எதுவும் தப்பவில்லை. குப்பை தொட்டிகள் தூக்கிவீசப்பட்டு வாகன ஓட்டிகளை பதம் பார்த்தன.
சென்னை நகரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்தன. இதனால் அலுவலகப் பணி முடித்து வீடுகளுக்குத் திரும்புவோர் பெரும் அவதிக்குள்ளாக்கினர். மின்சார ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை நகரிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் இதர மாநிலங்களுக்கும் செல்லும் அனைத்து ரயில் போக்குவரத்தும் தாமதமானது. கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியதால் வான் சேவையும் சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது.
கொந்தளித்த கடல்
பலத்த மழை காரணமாக சென்னை கடற்கரையில் மின்னல் வீச்சின் தாக்கம் அதிகமாக இருந்தது. அலைகள் பெருங்கொந்தளிப்புடன் இருந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பினர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: தங்கம் விலை இன்று சரிந்தது.. சவரனுக்கு ரூ.800 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் ரேட் என்ன? -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications