சபரிமலை பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது: கேரள முதல்வர்
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதிப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதை குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சபரிமலை தேவஸ்வசம் வாரியம் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில், சபரிமலை பக்தர்களால் புலிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து கேரள மாநில வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சபரிமலை கோவில் மிகவும் பழையானது. இப்பகுதியில் புலிகள் சரணாலயம் அமைக்கப்படுவதற்கு முன்பே, இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதால், புலிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சபரிமலை கோயில் தொடர்பான அனைத்து விஷயங்களும் உச்சநீதிமன்றத்துக்கு தெரியும். சபரிமலை கோவிலில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பான மாஸ்டர் பிளான் உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயில் வளர்ச்சிக்காக புலிகள் சரணாலயம் பகுதியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் 12.67 ஹெக்டேர் வனப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு சபரிமலை கோவிலில் ஆய்வு நடத்திய புத்த சிங் தலைமையிலான பொது கணக்குகள் கமிட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தகுந்த வசதிகளை செய்து தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டினார். எனவே சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்க கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அனுப்பி உள்ள நோட்டீஸிற்கு, வரும் 1ம் தேதி கேரள அரசு தரப்பில் மேற்கண்ட கருத்துகள் அடங்கிய பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications