'செம்மண் கொள்ளை': மகனுடன் தப்பியோடிய பொன்முடி.. ஆந்திராவில் மாமியார் வீட்டில் பதுங்கல்?

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சியர் குமரபாலன் கொடுத்த புகாரின் பேரில் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பொன்முடியின் கூட்டாளியான ஜெயச்சந்திரன் என்பவர் மட்டும் போலீசில் பிடிபட்டார். பொன்முடியும் அவரது மகன் சிகாமணியும் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
ஆந்திராவில் பதுங்கல்
இருவரும் தமிழக- ஆந்திரா எல்லையில் உள்ள பொன்முடியின் மாமியார் வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ள மாமியார் ஊரில் உள்ள தோட்டத்துக்கு விழுப்புரத்தில் இருந்து ஆட்களை அனுப்புவதற்காகவே தனியே ஒரு அரசுப் பேருந்தையே தமது அமைச்சர் பொறுப்பு காலத்தில் விட்டவர்தான் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாமியார் வீடு அல்லது அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிச்சயம் பொன்முடி பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். முன்னர் சென்னையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது பொன்முடி கிளப்பிவிட்ட நாடகம் என்றும் போலீசார் கூறுகின்றனர். பொன்முடியை எப்படியும் வளைத்துப் பிடிக்க அவரது ஆதரவாளர்களை முதல் கட்டமாக போலீஸ் தூக்கியுள்ளது.
நெருக்கமான கோத.குமார் கைது
பொன்முடிக்கு வலது, இடது கரங்களாக செயல்பட்டவர்களிடம் நேற்று விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவரும், கல்வி நிறுவன அதிபருமான கோத.குமாரின் நன்னாடு கிராமத்துக்கு நேற்று நள்ளிரவு போலீசார் சென்றிருந்தனர். சென்னையிலிருந்து நேற்றுதான் அவர் ஊர் திரும்பியதாகக் கிடைத்த தகவலையடுத்து அவர் விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. பொன்முடி மற்றும் அவரது மகனின் இருப்பிடம் பற்றி துருவித் துருவி கேள்வி கேட்டனர். இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதனால் திமுகவினர் விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சுமார் 14 மணிநேர விசாரணைக்குப் பிறகு கோத.குமார் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் பொன்முடியை சந்தித்திருப்பதாகவும் பொன்முடியின் சில மூவ்கள் பற்றி சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொன்முடி, அவரது மகன் மீதான செம்மண் கொள்ளை வழக்கில் ஏற்கெனவே ஜெயச்சந்திரன் என்பவர் சிக்கினார். தற்பொழுது கோத. குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications