ஜெயலலிதா, கருணாநிதியை சந்திக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு
கொழும்பு: இந்திய அரசின் அழைப்பின் பேரில் வரும் 10-ந் தேதி இலங்கையிலிருந்து செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கூறியதாவது:
எங்களது இந்திய பயணத்தின் போது இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தமரான ஒரு அரசியல் தீர்வுக்கான வழிவகைகள்தான் பிரதான இடம் பிடித்திருக்கும். இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே காந்தாவை நாங்கள் நாளை மறுநாள் சந்திக்கிறோம். அதன் பின்னர் 10-ந் தேதி டெல்லிக்கு செல்கிறோம்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை டெல்லியில் சந்தித்துப் பேசுகிறோம். பின்னர் தமிழகம் சென்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரையும் சந்தித்துப் பேச உள்ளோம்.
இந்த பயணத்தின் போது அரசியல் தீர்வில் ஏற்பட்டிருக்கும் இழுபறி, தமிழர் வாழும் வடகிழக்கின் தற்போதைய நிலைமை, நிலப் பிரச்சனை ஆகியவற்றை பற்றி விளக்குவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications