ஜெயக்குமாரின் ஆதரவாளர் வெற்றிவேலின் கட்சிப் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Vetrivel
சென்னை: சட்டசபை சபாநாயகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள ஜெயக்குமாரின் ஆதரவாலரான வெற்றிவேல் எம்.எல்.ஏவிடமிருந்து வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியைப் பறித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா.

சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கடும் கோபத்திற்கும், அதிருப்திக்கும் ஆளானார் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார். இதையடுத்து தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.

இந்த நிலையில் ஜெயக்குமாருடன் இணைந்து செயல்பட்டு வந்தவரான, அவரது ஆதரவாளரும், எம்.எல்ஏவுமான வெற்றிவேல், வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து தற்போது தூக்கப்பட்டுள்ளார்.

அதேபோல தென் சென்னை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செந்தமிழனையும் நீக்கியுள்ளார் ஜெயலலிதா. இவர் ஏற்கனவே அமைச்சர் பதவியையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து சி.வி.சண்முகமும் நீக்கப்பட்டுள்ளார். இவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

புதிய தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக விருகை வி.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக டாக்டர் ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளராக டி.ஜி.வெங்கடேஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+