கேரளாவில் மானிய விலையில் ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் வழங்க முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் எல்லா தரப்பு மக்களுக்கும் மானிய விலையில் ஆண்டிற்கு 9 கேஸ் சிலிண்டர்கள் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
வீட்டு பயன்பாட்டிற்கான மானிய விலையிலான சிலிண்டர்கள் ஆண்டிற்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கேரளாவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும், மானிய விலையில் ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள எல்லா தரப்பு மக்களுக்கும், மானிய விலையில் 9 சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்று கேளராவில் போராட்டங்கள் நடைபெற்றது. இது குறித்து ஆலோசிக்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
அதன்பிறகு முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாவது,
டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பஸ் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும்படி தனியார் பஸ் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் மானிய விலையில் ஆண்டுக்கு 9 கேஸ் சிலிண்டர் வழங்க கேரள அரசு முடிவு செய்தது. இந்த சலுகை அனைத்து தரப்பினருக்கு வழங்கும்படி ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதை ஏற்று எல்லா தரப்பு மக்களுக்கும் ஆண்டுக்கு 9 சிலிண்டர் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications