பிளாட் காட்டுவதாகக் கூறி பெண்ணை காரில் வைத்து கற்பழித்த 3 ரியல் எஸ்ட்டே புரோக்கர்கள்!
காஜியாபாத்: பிளாட்டுகளைக் காட்டுவதாகக் கூறி பெண்ணை காரில் ஏற்றிச் சென்ற 3 ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அவரை காரில் வைத்தே கற்பழித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் இந்த சம்பவம் நடந்தது. 35 வயதான ஒரு பெண் பிளாட் வாங்குவதற்காக குர்காவ்ன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரை நாடியுள்ளார்.
அவரும் அவரது நண்பரும் ட்ரோனிகா சிட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் பிளாட்களை காட்டுவதாகக் கூறி அவரை ஸ்கார்பியோ காரில் அழைத்துச் சென்றனர். வழியில் இன்னொரு ரியல் எஸ்டேட் புரோக்கரையும் ஏற்றிக் கொண்டனர்.
அந்த நபர் குளிர்பானம் வாங்கி வந்திருந்தார். அதை அந்தப் பெண்ணுக்குத் தரவே அவர் மயங்கிவிட்டார்.
இதையடுத்து மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேரும் சேர்ந்து கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை வீட்டில் மயக்க நிலையிலேயே இறக்கிவிட்டுச் சென்றனர்.
மயக்கம் தெளிந்த பின்னரே அவருக்கு தான் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து காஜியாபாத் போலீசில் அந்தப் பெண் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் புபேந்தர், ரவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபர் தப்பிவிட்டார். அவரைத் தேடி வருகின்றனர். ஸ்கார்பியோ காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.