உதயக்குமாரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்... காங்கிரஸார் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயக்குமார் போன்றவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்பாவி மக்களை அவர் தனது சுயலாபத்திற்காகத் தூண்டி வருகிறார் என்று காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடந்த ஆர்பபாட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி, குமரி அனந்தன், ஜேஎம் ஆரூண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில்,

கூடங்குளம் அணுமின் நிலையம் காலத்தின் கட்டாயம். இதனால் ஆபத்து ஏற்படாது. 7 அடுக்கு பாதுகாப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர் என்றார்.

ராமசுப்பு எம்.பி. பேசுகையில், நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தை தடுக்கிறார்கள். உதயகுமார் போன்றவர்களை முளையிலேயே கிள்ளி எறிந்து இருக்க வேண்டும். இடிந்தகரை பகுதியில் அப்பாவி மக்களை தங்கள் சுயலாபத்துக்காக உதயகுமார் மற்றும் சில அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

உங்களால்தானே காங்கிரஸ் போச்சு.. தங்கபாலுவுக்கு எதிராக திடீர் கோஷம்

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே தங்கபாலு தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்கபாலு மைக்கைப் பிடித்து உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு தொண்டர் தங்கபாலுவைப் பார்த்து, காங்கிரஸ் அழிவதற்கு நீங்க தான் காரணம் இங்க வந்து சரியானவர் போல பேசுகிறீரே என்று கோபமாகப் பேச தங்கபாலு டெனஷன் பிளஸ் அதிர்ச்சியாகி விட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த தொண்டரை அங்கிருந்து அகற்றி வைத்து தங்கபாலவை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+