சென்னையிலிருந்து புறப்பட இருந்த ட்ரீம்லைனர் விமானத்தில் ஏறி இறங்கிய கேரள இளைஞர்களால் பரபரப்பு
சென்னை: சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்ட ட்ரீம்லைனர் விமானத்தை புகைப்படம் எடுத்த கேரள வாலிபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையிலிருந்து டெல்லி செல்ல நேற்று காலை ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானத்தில் 206 பயணிகள் அமர்ந்திருந்தனர். விமான புறப்பட இருந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த அமீத்தாவா, மன்சூர் இருவரும் விமானத்தில் இருந்து இறங்க முயன்றனர். இதனால் அவர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்ட போது அவர்களது செல்போன்களில் ட்ரீம்லைனர் விமானத்தின் அனைத்து பகுதிகளையும் புகைப்படம் எடுத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
தற்போது கேரள வாலிபர்கள் இருவரிடமும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications