அவன விட 1 ரூபாயாவது அதிக சம்பளம் கிடைச்சா தான் சந்தோஷம்!

லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் எஜுஏர்டு பெரேஸ் அசான்ஜோ இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
உறவினர்கள் அதிகமாக சம்பாதிக்கும்போது, அதைப் பார்த்து நமது சந்தோஷமும், வேலை பார்க்கும் இடங்களில் பணித்திறனும் குறைகிறது. இதற்காக அதிக நேரம் உழைத்து, அவர்களைவிட அதிகமாகவோ அல்லது இணையாகவோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
மேலும் நாம் பெறக்கூடிய சம்பளத்தால் மகிழ்ச்சி பெற்றாலும், சக ஊழியர்கள் சற்று அதிக சம்பளம் பெறும்போது, வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சியை இழக்க நேரிடுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் பக்கத்து சீட்டுக்காரரின் சம்பளத்தை விட நம்மோட சம்பளம் அதிகமாக இருக்கவேண்டும் என்பது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் பொதுவான கருத்தாக இது உள்ளது. மேலும், சம்பள விஷயத்தில் மகிழ்ச்சியாக இல்லாத ஒருவரைவிட, மகிழ்ச்சியாக இருப்பவர் அதிகமாக வேலை பார்த்து பணித்திறனை அதிகமாக வெளிப்படுத்துகிறார் என்று ஆய்வினை மேற்கொண்ட அசான்ஜோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications