ஜெகன் மோகனின் ரூ. 51 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கப் பிரிவு

பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பாக சிபிஐயால் கைது செய்யப்பட்டு இப்போது ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் இருக்கும் நிலையில், அவரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சொத்துக்கள் ஜெகனின் ஜகதி பப்ளிகேஷன் மற்றும் ஜனனி கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவை ஆகும். இதனால் இந்தச் சொத்துக்களை இனிமேல் ஜெகன் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது.
சட்ட விதிகளை மீறி பல்வேறு நிறுவனங்களுக்கு ராஜசேகர ரெட்டியும் ஜெகனும் சேர்ந்து சுரங்க அனுமதிகள், சிறப்புப் பொருளாதார மண்டல அனுமதிகள் வழங்கியதில் அரசுக்கு ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதற்குப் பிரதிபலனாக இந்த நிறுவனங்கள் ஜெகனின் பல்வேறு நிறுவனங்களில் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளன.
தனக்கு முதல்வர் பதவி தராததையடுத்து காங்கிரசிலிருந்து பிரிந்த ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தை பெயரில் தனிக் கட்சி தொடங்கி, சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீன் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.












Click it and Unblock the Notifications