பாஜக எம்பி ராம் ஜெத்மலானியன் கைத்துப்பாக்கி திருட்டு போனதாக என்று புகார்
குர்கான்: பாஜக எம்.பி ராம் ஜெத்மலானியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது கைத்தூப்பாக்கியும், அதற்கான லைசென்ஸூம் திருட்டு போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி. ராம் ஜெத்மலானி. பிரபல வழக்கறிஞர். தனது மகளுடன் ரஹேஜா அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜெத்மலானியின் மகள் ராணி இறந்தார். இதனால் ராம் ஜெத்மலானி, டெல்லியில் உள்ள தனது அலுவலக பங்களாவில் வசிக்க முடிவு செய்தார்.
இதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது பொருட்களை அலுவலக பங்காளாவிற்கு மாற்றி கொண்டிருந்தார். அப்போது நெருக்கடியான சூழ்நிலையில் தான் வைத்திருந்த கைத்தூப்பாக்கியும், அதற்கான லைசென்ஸூம் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து ராம் ஜெத்மலானி, குர்கான் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கைத்துப்பாக்கியும், அதற்கான லைசென்ஸையும், அடையாள தெரியாத யாரோ திருடி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications