பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் மீண்டும் தேர்வு!
சென்னை: தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக ஆம்ஸ்ட்ராங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாநில மகளிர் அணி தலைவி தமிழ்மதி தவிர மற்ற மாநில, மாவட்ட கமிட்டிகள் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் பட்டியல் அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மாநில தலைவராக கே.ஆம்ஸ்ட்ராங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை தலைவராக மணிவண்ணன், பொருளாளராக அப்சல், மாநில பொது செயலாளர்களாக பெரியார் அன்பன், கே.தேவேந்திரன், ஆறுமுகம், கமல்வேல் செல்வன், காளிதாஸ், பி.ராஜப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில செயலாளர்களாக லயன் முருகன், டாக்டர் சத்யராஜ், செல்வராஜ், செல்வகுமார், ஆகியோரும், நிர்வாக குழு உறுப்பினர்களாக சகாபுதீன், ஈஸ்வரன், எம்.சி.மகான், ஸ்டீபன்ராஜ், சுரேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கான மத்திய கமிட்டி புதிய ஒருங்கிணைப்பாளர்களாக டாக்டர் அசோக் சித்தார்த்தா, கோபிநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநில மகளிர் அணி தலைவியாக தமிழ்மதி நியமிக்கப்பட்டுப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications