கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உயர்நீதிமன்றம்
சென்னை: சென்னையில் உள்ள லயோலா, ஸ்டெல்லா மேரிஸ் ஆகிய கல்லூரிகள், அரசு நியமித்த கல்வி கட்டணத்தை விட மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உண்மையுள்ள கத்தோலிக்க கூட்டமைப்பு சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல தமிழ்நாடு கத்தோலிக்க சிறுபான்மையினர் நல சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் சென்னை லயோலா கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட இரு மனுக்களையும் விசாரித்த உயர்நீதிமன்றம், இரு கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த இடைக்கால தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து இரு கல்லூரிகளின் தரப்பில் மேலும் ஒரு மனு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை மட்டும் வசூலிப்பதால், கல்லூரிக்கான அடிப்படை செலவுகளை மேற்கொள்ள சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே நீதிமன்றம் விதித்துள்ள இடைகால தடையை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஒரே சர்ச்சை சேர்ந்த இரு பிரிவினர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை பொதுநல வழக்காக கருத முடியுமா என்பதை முடிவு செய்ய, இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதேநேரம் கல்வி கட்டணம் சம்பந்தமாக ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிக்க வேண்டியதில்லை என்று கருதுவதால், அந்த தடையை நீக்குகிறோம் என்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications