ஒகேனக்கலில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Subscribe to Oneindia Tamil

ஒகேனக்கல்: காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Hogenakkal
கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் அதிகஅளவில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் எல்லைப்பகுதியான ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளம் பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், படகுப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+